For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயாவிடம் பணம் வாங்கினார் ராமதாஸ்: கருணாநிதி குற்றச்சாட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பணத்தை வாங்கிக் கொண்டு ஜெயலலிதாவுடன் சேர்ந்த ராமதாஸ் மற்றும் ஜெயலலிதாவுடன் ரகசிய உடன்பாடுசெய்து கொண்டு கடைசி நேரத்தில் திமுகவை விட்டு வெளியேறிய வைகோ ஆகியோரால் தான் திமுக பெரும்தோல்வியைத் தழுவியது என முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார்.

திமுகவின் தேர்தல் தோல்வி குறித்து சென்னையில் திங்கள்கிழமை நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் அவர்பேசுகையில்,

ஜெயலலிதா தனது பண பலத்தைக் கொண்டு பெரிய கட்சிகள் கொண்ட கூட்டணியை அமைத்தார். அது அவருக்குவாழ்வா சாவா போராட்டம் என்பதால் பணத்தை வாரி இறைத்தார்.

வைகோ கடந்த 8 மாதங்களுக்கு முன்பே ஜெயலலிதாவுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டார். கடைசிநேரத்தில் சில ஏற்க முடியாத நிபந்தனைகளைப் போட்டுவிட்டு திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவேன் எனஜெயலலிதாவுக்கு வைகோ உறுதி மொழி கொடுத்திருந்தார். அதை கடைசி நேரத்தில் செய்தும் காட்டினார்.

மதிமுக நமது கூட்டணியில் இருந்திருந்தால் நிச்சயம் 10 இடங்களிலாவது வென்றிருக்கும். திமுகவும் கூடுதலாகசுமார் 10 இடங்களில் அதிகம் வென்றிருக்கும்.

பணத்துக்காகத் தான் ராமதாஸ் திமுகவை விட்டுவிட்டு ஜெயலலிதாவிடம் போனார். அரசனை (ஜெயலலிதாவை)நம்பி புருசனை (திமுகவை) கைவிட்டவர் ராமதாஸ்.

இந்தக் கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கிறோம். உறுப்பினர்கள் மனதில் உள்ளதைவெளிப்படையாகப் பேசலாம். அதற்காக ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி தூற்ற வேண்டாம் என்றார்கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X