இலங்கையில் கொடுமைக்குள்ளாகும் தமிழக மீனவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தங்களிடம் சிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவமும் அரசும் கொடுமைப்படுத்தி வருகின்றன என தமிழகமுதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

சென்னை வந்த இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில்சந்தித்துப் பேசினார்.

இதன் பின்னர் வெளியே நிருபர்களைச் சந்தித்த ஜெயலலிதா, நடுக்கடலில் தெரியாத்தனமாக இலங்கை கடல்எல்லைக்குள் நுழைந்துவிடும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இழுத்துச் சென்று அங்கு சிறைகளில் தள்ளிகொடுமைப்படுத்தி வருகிறது.

இது குறித்து இலங்கை அதிபரிடம் பேசி பிரச்சனையைத் தீர்க்குமாறு ரணில் விக்கிரமசிங்கேயிடம் கோரியுள்ளேன்.

கட்சத் தீவை மீட்பது குறித்து மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் வெறும் முதலமைச்சர் தான்.

தமிழகத்தில் 74 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரே நேரத்தில் மாற்றப்பட்டிருப்பது முழுக்க முழுக்க நிர்வாகரீதியிலானசெயல். இதை பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்பது சரியல்ல. அப்படியே கேட்டாலும் அதை உங்களிடம்விளக்கிக் கொண்டிருக்க முடியாது.

என்னை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்த கவர்னர் பாத்திமா பீவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்என தமிழக பா.ஜ.கவின் தீர்மானம் குறித்துக் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+