கொசுத் தொல்லையில் சிக்கி தவிக்கும் இந்திய ராணுவ வீரர்கள்
க்வாபரி (அசாம்):
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள ராணுவ வீரர்களை, தீவிரவாதிகளை விட மிகவும்கொடூரமாக கொசுக்கள் துன்புறுத்தி வருகின்றன.
கொசுக்களின் தொல்லையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும்படி, ராணுவ வீரர்களுக்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொசுக்கள் கடித்தால் மலேரியா போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் வரும் காரணத்தால் ராணுவ வீரர்களுக்குஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அசாமில் கடந்த 20 நாட்களில் மட்டும் கொசுக்களின் தொல்லையினால் பொதுமக்கள் 100 பேர்உயிரிழந்துள்ளனர். 10,000 க்கும் மேற்பட்டோர் மலேரியா மற்றும் இதர நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா-பூட்டான் எல்லைப்பகுதி கமாண்டர் கே.டி.ஷெல்லி கூறுகையில், அனைத்து ராணுவ வீரர்களுக்கும்மலேரியா போன்ற உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாக்கும்படி, எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மலேரியா தடுப்பு மாத்திரைகளை சாப்பிடும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொசுக்கள் தீண்டாமல் இருக்கும் வகையில் விநியோகப்பட்ட எண்ணெயை முதலில் ராணுவ வீரர்கள் தங்கள்உடம்பில் தடவிக் கொள்ள வேண்டும் என்றும், முழுக்கை சட்டையை மட்டுமே அணிய வேண்டும் என்றும் ராணுவவீரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தூங்கும்போது தங்கள் கட்டிலில் கொசுவலை கட்டியே தூங்க வேண்டும் என்றும் ராணுவ வீரர்களுக்குஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அசாம், மேகாலயா மர்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் காலநிலை மாற்றத்தின்போது மலேரியா நோய்பரவும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த மாநிலங்களில் 500 க்கும் மேற்பட்டோர் மலேரியாநோயால் உயிரிழக்கின்றனர்.
அசாமில் கடந்த 5 வருடங்களில் மலேரியா நோய்க்கு 50 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், புறக்காவல் படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்றார்.
பூட்டான் எல்லைப்பகுதியில் பணிபுரியும் ராணுவ துணை கமாண்டர் ராஜ் குமார் சந்த் கூறுகையில், ஒவ்வொருசெவ்வாய்க்கிழமையும் பகல் உணவுக்குப்பிறகு சாப்பிடுவதற்காக மாத்திரைகள் ராணுவ வீரர்களுக்குவிநியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது மலேரியா நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகின்றன.
அதே போல் ராணுவ வீரர்கள் மலேரியா தடுப்பு நடவடிக்கைகளை ஒழுங்காகப் பின்பற்றுகிறார்களா என்றுகண்காணிக்கும்படி, ராணுவ அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது என்றார்.
அசாம் மாநிலம் க்வாபரியைச் சுற்றியுள்ள 5,000 கிராம மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக ராணுவ வீரர்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மலேரியா நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்து கொள்வது எப்படி? என்று ராணுவ வீரர்களுக்கு, ராணுவஅதிகாரிகள் பயிற்சி அளித்து வருகிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.