புதுவையில் பெரும்பான்மையை நிரூபிக்க திமுக கோரிக்கை
பாண்டிச்சேரி:
சட்டசபையைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி காங்கிரஸ் கட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்றுபாண்டிச்சேரி ஆளுநருக்கு திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து பாண்டிச்சேரி முன்னாள் முதல்வர் ஆர்.வி. ஜானகிராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டசபையை என்றைக்குக் கூட்ட வேண்டும் என்று கூட தெரியாமல் இன்னும் காங்கிரஸ் கட்சி திணறிக்கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீட்டிலும் பெரும் குழப்பம் நிலவுகிறது. தவணை முறையில்அமைச்சர்கள் பதவி ஏற்கும் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம் தொடர்கிறது. அரசு இயந்திரம் கடந்த 18 நாட்களாகமுடங்கிப் போய் இருக்கிறது.
ஜனநாயக மரபுகள் யாவும் கொலை செய்யப்பட்டு விட்டன. இந்த வாரத்திற்குள் சட்டசபையைக் கூட்ட வேண்டும்.பெரும்பான்மையை நிரூபிக்க தேதி குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்.
பெரும்பான்மையை காங்கிரஸ் நிரூபிக்க முடியாத பட்சத்தில், புதுவை மக்கள் காங்கிரஸ், பாஜக ஆகியகட்சிகளுடன் சேர்ந்து பாண்டிச்சேரியில் திமுக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஜானகிராமன் அறிக்கையில்கூறியுள்ளார்.