For Daily Alerts
Just In
வன்முறை வெடிக்கும்: ஜெயலலிதாவுக்கு திமுக எச்சரிக்கை
சென்னை:
திமுகவினர் மீது ஜெயலலிதா அரசு தொடர்ந்து நெருக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் வன்முறை வெடிக்கும்என மத்திய அமைச்சர் முரசொலி மாறன் எச்சரிக்கை விடுத்தார்.
வழக்கமாக அடக்கி வாசிக்கும் முரசொலி மாறன் திங்கள்கிழமை நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் மிகக்கடுமையாகப் பேசினார்.
மாறன் கூறுகையில்,
தேர்தல் தோல்வி குறித்து நடந்த அந்தக் கூட்டத்தில், ஜெயலலிதா அரசு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில்ஈடுபட்டுள்ளது. பொய்களைக் கூறி வருகிறது. திமுகவினர் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.
இந்த அடக்குமுறை தொடர்ந்தால் சட்டமன்றத்திலும் வெளியிலும் வன்முறை வெடிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எதையும் சந்திக்க கட்சியின் சட்டப் பிரிவு தயாராக இருக்க வேண்டும். ஜெயலலிதாவின் அடக்குமுறையை நாம்தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு மாறன் கூறினார்.
Comments
Story first published: Monday, June 4, 2001, 5:30 [IST]