புத்துயிர் பெறுகிறது தொட்டில் குழந்தை திட்டம்
சேலம்:
தமிழகத்தில் புத்துயிர் பெறுகிறது "தொட்டில் குழந்தை திட்டம்.
மீண்டும் அமலுக்கு வந்த இந்த திட்டத்தில் சேலத்தில் இரண்டு பெண் குழந்தைகள் தொட்டிலில் இடப்பட்டன.
கடந்த அதிமுக ஆட்சியின்போது தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண் குழந்தையைவளர்க்க முடியாத பெற்றோர்கள் குழந்தைகளை தொட்டிலில் போட்டு விட்டுச் செல்லலாம். அந்த குழந்தையை அரசுதனது பராமரிப்பில் வளர்க்கும் என திட்டமிடப்பட்டது.
இந்த திட்டம், திமுக 1996ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் கிடப்பில் போட்டு விட்டது. இதையடுத்து தற்போதுஅதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் புத்துயிர் கொடுத்துள்ளது. மீண்டும் அரசுத் தொட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலத்தில் இத்திட்டத்தின் முதல் கட்டமாக இரண்டு பெண் குழந்தைகளை சிலர் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.சேலம் அரசு மருத்துவமனை அருகே உள்ள இந்த தொட்டிலில் கிடைத்த இரண்டு பெண் குழந்தைகளில் ஒன்று ஒருஆண்டு வயதுடையது.
மற்றொன்று நான்கு மாதமே நிரம்பியுள்ளது. இந்த குழந்தைகளுக்கு ஸ்ரீதேவி என்றும் செல்வி என்றும்பெயரிடப்பட்டது.
பின்னர் இக் குழந்தை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தற்போது இரண்டு ஆயக்களின் பராமரிப்பில்விடப்பட்டுள்ளது. விரைவில் இக்குழந்தைகள் ஆதரவற்ற அனாதை இல்லத்தில் பராமரிக்கப்படும்.