For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக சுக்குநூறாகும்: தாமரைக்கனி சாபம்

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்:

"ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரத்தான் போகிறது. அப்போதுஅதிமுக சுக்குநூறாக உடைந்து சிதறும்" என்று அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ தாமரைக்கனி சாபம்விடுத்துள்ளார்.

கொலைமிரட்டல் வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தாமரைக்கனி, ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்திலேயே விடிய விடியத் தங்க வைக்கப்பட்டார். திமுக கரை வேட்டி அணிந்திருந்த தாமரைக்கனி பின்னர்நிருபர்களிடம் கூறியதாவது:

எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், பிரமுகர்கள் மட்டுமல்லாமல் என்னையும் ஜெயலலிதா கைது செய்து வருகிறார்.விசாரணை இல்லாமலேயே கைது செய்வது கண்டிக்கத்தக்கது.

எம்ஜிஆர் கட்சியைத் துவங்கிய நாளிலிருந்து, அதிமுகவின் வளர்ச்சிக்காகவும், பொதுமக்களின் நலனுக்காகவும்நான் பாடுபட்டுள்ளேன். பலமுறை சிறை சென்றிருக்கிறேன். இன்று எம்ஜிஆர் அரசியல் வாரிசுகளுக்கெல்லாம்மதிப்பில்லை.

ஜெயில் எனக்குப் புதிதல்ல. அதிமுகவுக்காக உழைத்த என்னை கட்சிக்கே சம்பந்தம் இல்லாத ஜெயலலிதா பழிவாங்குகிறார். இதன் மூலம், அவர்தான் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் என்று நன்றாகத்தெரிகிறது.

காலம் ஒருநாள் மாறும். ஜெயிலில் இருந்து வந்த பிறகு, பெரும் கூட்டத்துடன் நான் திமுகவில் இணைவேன்.

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரத்தான் போகிறது.அப்போது அதிமுக சுக்கு நூறாக உடையும் என்றார் தாமரைக்கனி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X