இந்திய பஞ்சாலை அதிபர்கள் அமெரிக்கா பயணம்
கோவை:
லத்தீன், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கு இந்திய பஞ்சாலை அதிபர்கள் சுற்றுப் பயணம்செல்லவிருக்கின்றனர். இந்தப் பயணத்தின் நோக்கம், நவீன தொழில் நுட்பஙங்களைக் கண்டறிந்துசெயல்படுத்தப்படுவதாகும்.
இது குறித்து ஜவுளி ஏற்றுமதி வளர்ச்சிக் கழகத் தின் துணைத் தலைவர் செந்தில்குமார் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
இந்திய ஜவுளி ஏற்றுமதி வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக ஒரு குழு லத்தீன், அமெரிக்காவிற்குச் செல்கிறது. இந்தகுழுவில் பஞ்சாலைத் தொழில் அதிபர்கள் இடம் பெறுகின்றனர். இவர்கள் லத்தீன் அமெரிக்கா, பிரேசில்,கொலம்பியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு இந்த குழு பயணம் செய்யும்.
இந்தப் பயணத்தின்போது அவர்கள் அந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பங்களை அவர்கள் விரிவாகஅறிவர். மேலும் இந்த நாடுகளில் ஏற்றுமதிக்கான தடைகளோ அல்லது வரியோ அதிகபட்சம் இல்லை.
எனவே, இங்கு தொழில் துவங்க தேவையான வாய்ப்புகள் மற்றும் கூட்டு ஒத்துழைப்பு ஆகியவை ஏற்படுகின்றன.
இந்த நாடுகளில் தொழில் துவங்க நாடுகளின் அரசு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எனவே, இங்குமுதலீடு செய்து ஏற்றுமதியை பெருக்கும் வாய்ப்புகள் இருப்பது பற்றியும் விவாதிப்பர் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications