கவர்னர் விவகாரம்: பாஜகவுக்கு வீரமணி கண்டனம்
சென்னை:
தமிழக முதல்வராக ஜெயலலிதாவை பொறுப்பேற்றுக் கொள்ள அழைத்ததற்காக, கவர்னர் பாத்திமா பீவியைமத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக பாஜகவுக்கு திராவிடர் கழகம்கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனநாயகத்திலும், அரசியலமைப்புச் சட்டங்களிலும் பாஜக உண்மையான பற்று கொண்டிருந்தால் கவர்னரின்செயலை அவர்கள் பாராட்டியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு செயற்குழுக் கூட்டத்தில் கவர்னரை மத்தியஅரசு வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.
பாஜகவின் இந்தத் தீர்மானம் கவர்னருக்கு எதிரான செயல் அல்ல. மக்கள் தீர்ப்புக்கு எதிராக எடுத்த தீர்மானமாகும்என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பாஜக செயற்குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், ஊழல் வழக்கில் 2ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதாவை கவர்னர் பாத்திமா பீவி முதல்வராகப்பொறுப்பேற்றுக் கொள்ளும்படி அழைத்திருக்கக் கூடாது.
ஜெயலலிதாவை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும்படி, அழைப்பதற்கு முன்பு கவர்னர் யாருடனும்இதுகுறித்து ஆலோசனை நடத்தவில்லை. கவர்னரின் முடிவு ஜனநாயக மற்றும் சட்ட விரோத நடவடிக்கையாகும்.இதனால் கவர்னரை மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதுநினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.