மாவட்டங்களுக்கு தலைவர்கள் பெயர் இல்லை: வீரமணி வரவேற்பு
சென்னை:
தமிழகத்தில் மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு சாதித் தலைவர்கள் பெயரையோ அல்லதுமறைந்த அரசியல் தலைவர்கள் பெயரையோ வைப்பதில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததற்குதிராவிட கழகப் பொதுச்செயலாளர் வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தமிழகத்தில் ஏற்கனவே மாவட்டங்கள் மற்றும்போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சாதித்தலைவர்களின் பெயர்கள்வைக்கப்பட்டிருந்தது.
இது கருணாநிதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டவுடன் நீக்கப்பட்டது. தற்போது ஜெயலலிதா தமிழகமுதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் மீண்டும் தலைவர்கள் பெயர்களை போக்குவரத்துக் கழகங்களுக்குவைத்து விடுவார்களோ என்ற அச்சம் இருந்தது.
ஆனால் மீண்டும் தலைவர்கள் பெயரை வைக்கும் எண்ணம் இல்லை என்று சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்துவிட்டார். இது நல்ல முடிவு.
போக்குவரத்துக் கழகங்களுக்கும், மாவட்டங்களுக்கும் தலைவர்கள் பெயரை வைத்தால் இது வேண்டாதசாதிச்சண்டைகளையும், அனைத்து சமுதாய மக்களுக்கும் கசப்பான அனுபவங்களையும் ஏற்படுத்திக் கொடுத்துவிடும் என்பது மறுக்க முடியாத ஒன்று என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.