பார்முலா ஒன் சோதனை கார் பந்தயம்- நரேன் தேர்வு

Subscribe to Oneindia Tamil

கோவை:

"பார்முலா ஒன் கார்ப் பந்தயத்திற்கான காரை ஓட்டி சோதனை செய்ய முதல் முதலாக இந்தியர் ஒருவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அந்த பெருமையை கோவை கார்ப் பந்தய வீரரும், ஆசிய சேம்பியனுமான நரேன்கார்த்திகேயன் பெறுகிறார்.

சர்வதேச அரங்கில் புகழ் பெற்ற கார்ப் பந்தய வீரர்களில் கோவையைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயனும் ஒருவர்.அவர் கடந்த முறை நடந்த சர்வதேச சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய கோப்பைக் கார் பந்தயங்களில் பங்கேற்றார்.

இவர் தற்போது ஜப்பானில் நடந்து வரும் நிப்பான் கார்ப் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். இந்திய வர்த்தகநிறுவனங்களான சியட், எக்சைடு பேட்டரி மற்றும் சில நிறுவனங்களின் சார்பாகப் பங்கேற்றார். ஆனால்இப்போட்டியில் அவர் முழுமையாக கலந்து கொள்ள முடியாமல் பாதியிலேயே போட்டியிலிருந்து விலகினார்.

இப்போட்டியில் முதல் சுற்றில் 17வது வட்டத்தில் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். பின்னர்அடுத்தமுறையில் அவரது கார் திடீரென பழுதானது. 22 சுற்றுப்பாதையில் இருந்த அவரது காரில் இரண்டாவது மற்றும்3வது கியர்கள் செயல் இழந்தன.

இதனால் 22ம் வட்டப்பாதையில் பந்தயக் கார் நிறுத்தி சரி செய்யப்பட்டது. 6.2 வினாடி தாமதத்திற்கு பிறகுபுறப்பட்ட அவரது கார், மீண்டும் பழுதடைந்தது.

32 வது வட்டத்தில் அவரது கார் நுழைந்தபோது வண்டியின் கியர்கள் முற்றிலும் செயலிழந்து விட்டன. இதனால்அவர் போட்டியிலிருந்து பாதியிலேயே விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சர்வதேச அரங்கில் புகழ் பெற்றுள்ள நரேன் கார்த்திகேயன், தற்போது இங்கிலாந்து நாட்டில் நடக்கும் ஒட்டப்பந்தயக் கார்களைச் சோதனை செய்து பார்க்க அழைக்கப்பட்டுள்ளார்.

பார்முலா ஒன்றிற்கான இந்த டெஸ்ட் டிரைவிற்கு அழைக்கப்படும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர்பெறுகிறார். இங்கு ஜகுவார் ரக கார்கள் இடம் பெறுகின்றன. இந்த கார்களை ஓட்ட மிகவும் திறமை வாய்ந்தபந்தயக் கார் வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+