இந்தியா-ரஷ்யா இணைந்து போர்விமானம், நீர்மூழ்கி தயாரிப்பு
மாஸ்கோ:
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து அதிநவீன போர் விமானம், நீர் மூழ்கிகள், மாபெரும் ராணுவ சரக்கு விமானம்ஆகியவற்றைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளன.
போர் விமானத்தைப் பொறுத்தவரை ரஷ்யாவின் "சுகோய்" விமானக் கட்டுமானத் துறை உருவாக்க உள்ளது எனரஷ்யாவின் துணைப் பிரதமர் இல்யா கிளெபனவ் கூறினார்.
எஸ்-37 பெர்கட், அதாவது "கோல்டன் ஈகிள்" என்றழைக்கப்படும் இந்த போர் விமானம், எதிரி நாட்டின் ராடார்கண்ணுக்குப் புலப்படாமல் தப்பிக்கும் ஆற்றல் வாய்ந்தது. எஸ்-37 வரிசையில் முதல் போர் விமானம் 1997ஆம்ஆண்டு வடிவமைக்கப்பட்டது.
ஆனால், போதிய நிதி வசதி இல்லாமையால் இந்த நவீன "சுகோய்" தயாரிப்பு திணறிக் கொண்டிருப்பதாகவும்கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியாவுடன் இணைந்து இந்த விமானத்தைத் தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
இந்தியா தவிர சீனாவும் எஸ்-37 ரக போர் விமானங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்கிக் கொண்டிருக்கிறது.
போர் விமானம் தவிர, நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிப்பதற்காகவும் இந்திய-ரஷ்ய நாடுகளுக்கிடையேபேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மாபெரும் ராணுவ சரக்கு விமானத்தை ரஷ்யாவின் இல்லூசின் கட்டுமான நிறுவனமும் இந்தியாவும் இணைந்துதயாரிக்க உள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.