பிரதமரை சந்தித்தார் ஜெயலலிதா
இந்த குழு விசாரணை முடிவை 3 நாட்களுக்குள் சமர்பிக்கும். விசாரணை முடிவு மக்களுக்கு அறிவிக்கப்படும்என்றார்.
நேபாளத்தில் வன்முறை பரவியதும், அந்நாட்டு அதிகாரிகள் தனியார் தொலைக்காட்சியான ஸ்டார்தொலைக்காட்சி மற்றும் ஜீ தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நாடு முழுவதும் தடை செய்தனர். இந்ததொலைக்காட்சி நிறுவனங்கள் நாட்டின் நிலைமையில் குழப்பத்தை உண்டாக்குவதாக கூறி இத் தொலைக்காட்சிநிறுவனத்தின் ஒளிபரப்பை தடை செய்தனர்.
கலவரம் பொதுநல விரோதிகளால் ஏற்பட்டது என போலீசார் கூறினாலும் அவர்கள் யார் என கூற மறுத்துவிட்டனர்.
முன்னதாக நேபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா நேபாள வானொலி மூலம் நாட்டு மக்களிடம் பேசினார்.அவர் மக்கைளை அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ராஜ குடும்பத்தினர் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது. உண்மை நிச்சயமாக வெளிவரும். பலவிதமான வதந்திகள் பரவி வருகின்றன. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். அமைதியாக இருங்கள் எனகேட்டுக் கொண்டார்.
மன்னராக பொறுப்பேற்றுள்ள ஞானேந்திராதான் மன்னர் குடும்பத்தினர் கொல்லப்பட்டதற்கு காரணம் என்றஎண்ணம் மக்களிடம் பரவி வருவதால்,கொய்ராலா மக்களை அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டார் எனகூறப்படுகிறது.
இந்நிலையில் இறந்து போன இளவரசர் தீபேந்திராவின் உடல் மன்னர் குடும்பத்தினரின் உடல்கள் எரியூட்டப்பட்டஇடத்திற்கு அருகிலேயே எரியூட்டப்பட்டது.
ஆனாலும் தீபேந்திராவின் உடல் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்ற போது சாலை முழுவதும் காலியாகஇருந்தது. தீபேந்திராவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த மக்கள் கூட்டம் காணப்படவில்லை.
அரண்மனை அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் மட்டுமே இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications