சென்னையில் மழை நீடிக்கும்
சென்னை:
சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் குறைந்தகாற்றழுத்த மண்டலம் ஏற்பட்டிருப்பதாலும், புயல் அபாயம் இருப்பதாலும் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலையில் வானம் மேகமூட்டமாக இருந்தது. ஆனால் மழை ஏதும் பெய்யவில்லை. இருப்பினும்பிற்பகலில் மழை பெய்யலாம் எனத் தெரிகிறது. சென்னை நகர மக்கள் வெயிலைப் பார்த்து நான்கு நாட்களாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கனத்த மழை பெய்யலாம் என வானிலைஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் குடியிருப்போர் எச்சரிக்கையாகஇருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.