ஆளுனரை திரும்ப பெற கருணாநிதி மீண்டும் கோரிக்கை
சென்னை:
தமிழக ஆளுனர் பாத்திமா பீவியை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் எனமுன்னாள் முதல்வரும், தி.மு.க.தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஊழல் வழக்குளில்தண்டனை பெற்றிருந்ததால் ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
இந்நிலையில் அ.தி.மு.க.எம்.எல்.ஏக்கள் சட்டசபை தலைவராக ஜெயலலிதாவை ஒரு மனதாக தேர்ந்தெடுத்தார்கள்.இதையடுத்து ஜெயலலிதா தமிழக ஆளுனர் பாத்திமா பீவியை சந்தித்து அ.தி.மு.கவை ஆட்சியமைக்கஅழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆளுனரும் அ.தி.மு.கவை ஆட்சி அமைக்க அழைத்தார். முதல்வராக ஜெயலிலதாவுக்கு பதவி பிரமாணமும் செய்துவைத்தார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்று தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படாதவருக்கு ஆளுனர்பதவிப்பிரமாணம் செய்து வைத்தது சட்டப்படி குற்றம் எனவும், எனவே ஆளுனரை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் எனவும் கருணாநிதி கோரியிருந்தார்.
ஆனால் இதை பிரதமர் வாஜ்பாய் நிராகரித்து விட்டார். இந்நிலையில் தமிழக ஆளுனரை திரும்பப் பெறுமாறுதொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம் என கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர்கூறுகையில், தி.மு.கவின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் பின்பற்றப்படும்.
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற ஜனநாயக வழிமுறையில் செயல்படுவோம் என்பதை நான் ஏற்கனவேகூறியுள்ளேன்.
பாத்திமா பீவி சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை திரும்ப அழைப்பது குறித்து பா.ஜ.க. மீண்டும்யோசனை செய்யுமா என கூறப்படுவது தவறான கருத்து. இது போன்ற தவறான கருத்துக்கள் கூறப்படுவதை நான்வன்மையாக கண்டிக்கிறேன்.
பாத்திமா பீவி சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதால் அவர் தமிழக ஆளுனராக வர வேண்டும் எனவிரும்பியவனே நான்தான்.
தீவிரவாத இயக்கங்களை தடை செய்ய வேண்டும்முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் வாஜ்பாயிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. ஆனால் அவர் தடை செய்யுமாறு கோரியுள்ள இரண்டு இயக்கங்கள்முன்னரே தடை செய்யப்பட்டுவிட்டன. மற்ற இரண்டு இயக்கங்களை தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு நான்கடிதம் எழுதியிருந்தேன்.
மத்திய அரசும் சில விளக்கங்கள் கேட்டு எனக்கு கடிதம் எழுதிதியிருந்தது. அந்த விவரங்களையும் நாங்கள்வழங்கி விட்டோம். தமிழக நலனுக்காக மத்திய அரசிடம் ஜெயலலிதா விடுக்கும் அனைத்து கோரிக்கைகளையும்தி.மு.க வரவேற்கும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications