கோவில்களில் பூஜை செய்ய ரூ.42,000 ஒதுக்கீடு
சென்னை:
தமிழகத்திலுள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் கோவில்களில் இருகால பூஜை செய்வதற்காக தமிழக அரசுஒவ்வொரு கோவிலுக்கும் ரூ.25,000 தரவுள்ளது.
மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் அய்யாறு வாண்டையார் புதன்கிழமை தஞ்சாவூர் சென்றார். பதவியேற்றபின் முதல் முறையாக தஞ்சாவூர் சென்ற அய்யாறு வாண்டையாருக்கு அதிமுகவினர் பிரமாண்ட வரவேற்புகொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகம் முழுவதிலும் ஆதிதிராவிட மற்றும் தாழ்த்தப்பட்டமக்களின் வசம் உள்ள கோவில்களை அடையாளம் கண்டறிந்து அங்கு பூஜைகள் நடத்துவதற்கு வசதியாகஒவ்வொரு கோவிலுக்கும் ரூ.25,000 வழங்கப்படவுள்ளது.
இதேபோல, தமிழகம் முழுவதிலும் பூஜைகள் நடத்துவதற்கு வசதியில்லாத 2,000 கோவில்களைத் தேர்வு செய்துஅங்கு பூஜைகள் நடத்துவதற்கு ரூ.17,000 ஒதுக்கப்படவுள்ளது.
தமிழகத்திலுள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தவும் தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் நீரைத் தேக்குவதற்காகஆழ்குழாய் கிணறுகள் அமைத்துத் தரவும் அரசு திட்டமிட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications