தி.மு.க முன்னாள் எம்.பிக்கு போலீஸ் காவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மிரட்டல் வழக்கில் கைது செய்யப்படுள்ள தி.மு.க. முன்னாள் எம்.பி., பரசுராமனை ஒரு நாள் போலீஸ் காவலில்வைக்குமாறு முதன்மை செஷன்ஸ் நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை கே.கே. நகரில் வசித்து வருபவர் தெய்வசிகாமணி. இவர் ரோடுபோடும் காண்ட்ராக்டராக பணிபுரிந்துவருகிறார். இவரிடம் கமிஷன் கேட்டு மிரட்டியதாக தி.மு.க முன்னாள் எம்.பி. பரசுராமன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடிப்படையில் பரசுராமன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்தவழக்கு புதன்கிழமை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

பரசுராமனை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட வேண்டும் என போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இந்தமனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார், போலீஸ் காவலில் வைக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என பரசுராமனை கேட்டார்.

பரசுராமன், எனக்கு உடல்நிலை சரியில்லை. சர்க்கரை வியாதி உள்ளது, நான் இந்த வழக்கில் சம்பந்தப்படவில்லைஎன்றார்.

இதையடுத்து நீதிபதி பரசுராமனை1 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். பரசுராமன் சர்க்கரை நோயால்பாதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு சரியான நேரத்தில் உணவு கொடுக்கப்பட வேண்டும்.

அவரிடம் அதிக நேரம் விசாரணை செய்யக்கூடாது. விசாரணையின் போது பரசுராமன் தனது வக்கீல்களை உடன்வைத்துக் கொள்ளலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்படி பரசுராமனை விசாரணை செய்யும் போது அவரது வக்கீல்கள் ஆர்.எஸ் பாரதி மற்றும் கிரி ராஜன்ஆகியோர் உடனிருப்பார்கள்.

பின் வழக்கை இந்த மாதம் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி அசோக்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+