அணுகுண்டிலிருந்து நெல்வயலுக்கு...
சென்னை:
அணு விஞ்ஞானியும் இந்திய ஏவுகணைத் திட்டத்தின் தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் கவனம்தற்போது விவசாயத்திலும் திரும்பியுள்ளது.
மறைந்த "பாரத ரத்னா" சி. சுப்பிரமணியம் கடந்த ஆகஸ்டு மாதம் நிறுவிய "நேஷனல் அக்ரோ பவுன்டேசன்" என்றஇயக்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து, டாக்டர் அப்துல் கலாமின் விவசாய ஆர்வம் மேலும்அதிகரித்துள்ளது.
சென்னை வந்திருந்த டாக்டர் அப்துல் கலாம், இந்த இயக்கத்துக்குச் சொந்தமான ஒரு பண்ணை நிலத்தைச் சுற்றிப்பார்த்தார். பின்னர், காஞ்சிபுரம் மாவட்டம் சுனாம்பேட்டில் உள்ள ஒரு நிலத்தில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டசொட்டுநீர்ப் பாசனத் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
சி. சுப்பிரமணியத்தின் "பசுமைப் புரட்சி" கனவை நனவாக்குவதற்கு வெகு ஆர்வத்துடன் இருப்பதாகக் கூறியடாக்டர் அப்துல் கலாம், நம் நாட்டில் உள்ள கிராமங்கள் அனைத்தும் முன்னேறினாலே போதும், நம் நாடு முழுவளர்ச்சியடைந்த நாடாகி விடும் என்றார்.
ஏவுகணை அனுப்புவதற்கும் அணுகுண்டு வெடிப்பதற்கு மட்டுமல்ல, உணவுப் பொருட்களைச் சேகரித்துவைப்பதற்கும் அணு சக்தி பயன்படுகிறது என்று டாக்டர் அப்துல் கலாம் மேலும கூறினார்.
நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications