அண்ணா சமாதியில் உதயசூரியன் அகற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில், திமுக ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்டிருந்த உதயசூரியன்சின்னம் அகற்றப்பட்டது.
கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தின்போது மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிபுதுப்பிக்கப்பட்டது. அப்போது புதிதாக ஒரு வளைவு அமைக்கப்பட்டது.
அந்த வளைவின் இருபுறத்திலும் பிரமாண்டமான உதய சூரியன் சின்னம் பொறிக்கப்பட்டது. திமுகவைஉருவாக்கியவர் என்ற வகையில் அண்ணாவை நினைவுகூறும் விதமாக அந்த சின்னம் பொறிக்கப்பட்டதாகஅப்போது கூறப்பட்டது.
இந் நிலையில், திடீரென சில அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை வந்து உதயசூரியனை அகற்றினார்கள். அவைஎதற்காக அகற்றப்பட்டது என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications