காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்போம்: கர்நாடகம்
டெல்லி:
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்குத் தலைவணங்குவோம் என்று காவிரி கண்காணிப்புக் கமிட்டிக் கூட்டத்தில்கர்நாடக தலைமைச் செயலாளர் தெரசா பட்டாச்சாரியா உறுதியளித்தார்.
காவிரிநதிநீர் கண்காணிப்புக் கமிட்டியின் 8 வது கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டம்மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சக செயலாளர் பி.என்.நாவல்வாலா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக தலைமைச் செயலாளர் தெரசா பட்டாச்சாரியா கூறுகையில், கடந்த வாரம்மேட்டூர் அணைக்கு கர்நாடகம் 1.4 டிஎம்சி அளவு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. தமிழகத்துக்குக் கொடுக்கவேண்டிய நீரின் அளவை விட இது மிகவும் குறைவான அளவாகும்.
கர்நாடகத்தில் இப்போது பருவமழை பெய்யாத காரணத்தால்தான் காவிரியிலிருந்து மேட்டூர் அணைக்குத் தண்ணீர்திறந்து விட முடியவில்லை.
பருவமழையைப் பொறுத்து தமிழகத்துக்குக் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடும். ஏனெனில் கர்நாடகத்தில் உள்ள 4அணைகளிலும் தற்போது தண்ணீர் பற்றாக்குறையே உள்ளது. இருப்பினும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பைகர்நாடகம் ஏற்கும் என்று உறுதியளித்தார்.