For Daily Alerts
Just In
காஷ்மீர்: குண்டு வீச்சுக்கு 2 பேர் பலி
ஸ்ரீநகர்:
மத்திய காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான சராரே ஷரீப்பில் அடையாளம் தெரியாத 2 பேர்கை எறிகுண்டுகளை வீசித் தாக்கியதில் 2 இஸ்லாமிய பக்தர்கள் கொல்லப்பட்டனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 20,000க்கும் அதிகமான இஸ்லாமிய பக்தர்கள் தொழுகைக்காக இங்குவந்துள்ள போதுதான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
குண்டுகளை எறிந்து முடித்ததும், அவர்கள் பக்தர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியாலும் சுட்டனர் என்றுகூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு யார் காரணம்என்று இன்னும் தெரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தப் புனித ஸ்தலத்தை தீவிரவாதிகள் தீ வைத்து எரித்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, June 8, 2001, 5:30 [IST]