For Daily Alerts
Just In
ஜெ. வழக்கு: புது அரசு வக்கீல் நியமனம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீதான நிலக்கரி பேர ஊழலை விசாரித்து வரும் 2-வது தனி கோர்ட்டுக்கான அரசு வக்கீலாகசந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் திமுக தோல்வியுற்றதைத் தொடர்ந்து அதிமுக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ளது.
இதையடுத்து ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிக் கோர்ட்டுக்களில் வாதாடிவந்த அரசு வக்கீல்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டனர்.
இதையடுத்து அந்தக் கோர்ட்டுகளில் வழக்குகள் நடைபெறாமல் தேங்கியுள்ளன.
இந் நிலையில், 2-வது தனிக் கோர்ட்டுக்கான அரசு வக்கீலாக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், ஜெயலலிதா மீதான நிலக்கரி பேர ஊழல் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர் மீதானவருமானத்துக்கு மீறிய வகையில் சொத்து சேர்த்த வழக்கு ஆகியவற்றில் வாதாடுவார்.
Comments
Story first published: Friday, June 8, 2001, 5:30 [IST]