கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் கல்லூரி மாணவர் ஒருவர் தான் தங்கியிருந்த விடுதியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
நீலகிரி மாவட்டம் எடக்காடு முக்திமலையைச் சேர்ந்தவர் செவணன். இவரது மகன் சதீஷ்குமார் (19). இவர் கோவைபெரிய நாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.
விடுமுறையில் சென்றிருந்த சதீஷ்குமார், வியாழக்கிழமை கல்லூரிக்குத் திரும்பினார். பின்னர் அவர் விடுதியில்தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவருடைய தற்கொலைக்கு என்ன காரணம் என்பது பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications