For Daily Alerts
Just In
வாஜ்பாய்-முஷாரப் சந்திப்பால் பயனிருக்காது: அத்வானி
சென்னை:
ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் வாஜ்பாய்-முஷாரப் சந்திப்பினால் மட்டும் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடாதுஎன்று கூறினார் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி.
சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் 165ஆம் ஆண்டு விழாவில் பேசிய அத்வானி மேலும் பேசியதாவது:
சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து காஷ்மீர் பிரச்சினை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்குமிடையே அமைதி ஏற்படுவதற்கு இந்தச் சந்திப்பு ஒரு வழி ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. அவ்வளவுதான். ஆனால் இதுவே பிரச்சினைகளுக்கு முழுத் தீர்வாக அமையும் என்று சொல்லமுடியாது என்று கூறினார் அத்வானி.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, June 8, 2001, 5:30 [IST]