ஆட்டோ டிரைவர் கொலை: கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
ஈரோடு:
ஆட்டோ டிரைவரைக் கொலை செய்து 83 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
ஈரோட்டில் உள்ள அன்னபூர்ணா ஏஜென்சி என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் சந்திரசேகரன் (25)என்பவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், அவர் வியாழக்கிழமை இரவு அலுவலகத்திலேயே தங்கியிருந்தார். அப்போது இரவில் சிலருடன்அவர் மது அருந்தியுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் சந்திசேகரனைக் கொலை செய்துள்ளனர்.
மேலும்,அங்கு சந்திரசேகரன் வைத்திருந்த 83 ஆயிரம் ரூபாயை பிடிங்கி எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில்கம்பெனி பிரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்ச ரூபாய் தப்பியது.
மறுநாள் காலையில் அலுவலகத்தை திறந்தபோது அங்கு சந்திரசேகர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இந்தசம்பவம் குறித்து உடனடியாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.