காவிரி பிரச்சனை: ஜெ. தலைமையில் ஆலோசனை
சென்னை:
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் காவிரிபிரச்சனை உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது.இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், சில உயர் அதிாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி எந்தவிதமான தகவலும் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை,
இந்தக் கூட்டம் மாலை 3 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிவரை ஒன்றரை மணிநேரம் நடந்தது. இந்தக்கூட்டத்தில், மழை பெய்தால் மட்டுமே காவிரி நீர் திறப்பு என கர்நாடக அரசு கூறியுள்ளது குறித்துவிவாதிக்கப்பட்டது.
இது குறித்து கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தலாமா அல்லது மத்திய அரசுடன் பேச்சுவார்ததைநடத்தலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இது தவிர உள்ளாட்சி அமைப்புகளை அடுக்காக மாற்ற மத்திய அரசை வலியுறுத்துவது, சாலைப் பணியாளர்களைமுழுவதுமாக நீக்கினால் சட்டப்பிரச்சனை ஏதும்வருமா, மதுக்கடையை ஏலம் விடும்முறையை மாற்றி அமைப்பது,அரிசி கையிருப்பின் தரம், குடிநீர் பிரச்சனையை சமாளிப்பது உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து இந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications