பாண்டி. சட்டசபை இன்று கூடுகிறது
சென்னை:
பாண்டிச்சேரி சட்டசபை சனிக்கிழமை கூடுகிறது. தற்காலிக சபாநாயகர் ஸ்ரீதரன், புதிய எம்.எல்.ஏக்களுக்குப்பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
பாண்டிச்சேரியில் முதல்வர் ப.சண்முகம் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. நான்குஅமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். சபாநாயகர் தேர்தல் இன்னும் நடைபெறவில்லை.
இந்த நிலையில் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து புதிய சட்டசபையின் முதல் கூட்டம் சனிக்கிழமை துவங்குகிறது. இக்கூட்டத்தில் தற்காலிகசபாநாயகர் ஸ்ரீதரன், புதிய எம்.எல்.ஏக்களுக்கு அப்போது பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
புதிய சபாநாயகர் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் அ.தி.மு.கவேட்பாளர் டி.ராமச்சந்திரன் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து தி.மு.க கூட்டணி சார்பில் வேட்பாளர்நிறுத்தப்பட்டுள்ளார். முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார்தான் தி.மு.க வேட்பாளர்.
காங்கிரஸ் கூட்டணிக்கு சட்டசபையில் 15 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. தி.மு.க கூட்டணிக்கு 12 பேரும், இரண்டுசுயேச்சைகளின் ஆதரவும் உள்ளது. எனவே ஒரு ஓட்டு மாறி விழுந்தால் கூட தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றுவிடுவார். எனவே சபாநாயகர் தேர்தல் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறவுள்ளது.