தமிழக அமைச்சரவையில் 3 பேர் மாற்றம்
சென்னை:
பதவியேற்ற 22 நாட்களிலேயே தன் அமைச்சரவையில் 3 பேரை நீக்கிவிட்டு, 3 புதிய அமைச்சர்களைநியமித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன.
சனிக்கிழமை மாலை தமிழக ஆளுநர் மாளிகைக்குத் திடீரென்று சென்ற ஜெயலலிதா, இந்த அதிரடி மாற்றங்களைஆளுநரிடம் தெரிவித்தார்.
இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த அய்யாறு வாண்டையார், தொழில்துறை அமைச்சராக இருந்த வி.ஜெயராமன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் ஆர். விஸ்வநாதன் ஆகியோர்தான் நீக்கப்பட்ட 3அமைச்சர்கள்.
இவர்களுக்குப் பதிலாக நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ. ஜீவானந்தம், உடுமலைப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.சி. சண்முகவேலு மற்றும் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் ஆகிய 3 பேரும் புதிய அமைச்சர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர்.
வேளாண்மைத்துறை ஜீவானந்தத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித்துறையைக் கவனித்துக் கொள்கிறார் சி. சண்முகவேலு. வைத்திலிங்கத்துக்குத் தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருக்கும் சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன.
வேளாண்மைத்துறையைக் கவனித்துக் கொண்டிருந்த பி.சி. ராமசாமி, இந்து அறநிலையத்துறை அமைச்சராகிறார்.கூட்டுறவுத்துறை அமைச்சர் பி. தனபாலுக்கு உணவு, நுகர்வோர் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைகளும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார் அமைச்சர் சரோஜா. இவர் முன்பு பிற்படுத்தப் பட்டோர் நலன், பால்வளம்,பால் பண்ணை வளர்ச்சி ஆகியவற்றைக் கவனித்து வந்தார்.
சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்த ஆலங்குடி வெங்கடாசலம், தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையைக்கவனிக்கப் போகிறார்.












Click it and Unblock the Notifications