"குவாலிஸ்" காரைப் பெற்றார்; அமைச்சர் பதவி போனது!
கோவை:
குவாரி அதிபர்கள் கொடுத்த "குவாலிஸ் கார் தான் பொள்ளாச்சி ஜெயராமன் பதவி பறிப்பிற்கு காரணமாகஇருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஜெயராமன். ஜெ.அமைச்சரவையில்தொழில்துறை அமைச்சாராக இடம் பெற்றார் இவர். இதை பொள்ளாச்சியைச் சேர்ந்த அதிமுகவினர் கோலகலமாகக்கொண்டினர்.
ஆனால் இந்தக் கொண்டாட்டம் 22 நாட்களுக்கு மட்டுமே நீடித்துள்ளது. அமைச்சராகி பொள்ளாச்சிக்கு முதல்முதலாக வந்த ஜெயராமனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கனிம வளத்துறை இவர் கையில்இருந்ததால், குவாரித் தொழிலதிபர்கள் அவரைச் சந்தித்தனர். அப்போதுஅமைச்சருக்காக குவாலிஸ் கார் ஒன்றை அவர்கள் பரிசளித்ததாகத் தெரிய வந்துள்ளது.
இந்தக் காரை முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு அன்பளிப்பாக அமைச்சர் கொடுத்து விட்டார் என்றும்பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த அன்பளிப்பு மேலிடத்திற்குத் தெரிய வந்தவுடன் பதவி பறிக்கப்பட்டு விட்டதுஎன அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தூய்மையான நிர்வாகத்தை அளிக்க இந்தமுறை ஜெயலலிதா உறுதி பூண்டிருப்பதால் இந்த அதிரடி மாற்றம்நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.