3 அமைச்சர்களைத் தந்த உடுமலைத் தொகுதி
உடுமலை:
உடுமலைப் பேட்டையில் தொகுதியின் 3வது அமைச்சாராகிறார் சண்முகவேலு.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சர் பதவி புதியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் தற்போதுஏற்பட்ட திடீர் அதிரடி மாற்றம் அதிமுகவினர் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கோவை மாவட்ட பொள்ளாச்சித் தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட ஜெயராமன் தொழில்துறை அமைச்சராகப்பொறுப்பேற்றார். ஆனால், 22 நாளிலேயே அவரது பதவி பறிக்கப்பட்டு விட்டது.
இதையடுத்து, கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சண்முகவேலு அமைச்சராக்கப்பட்டுள்ளார்.அமைச்சர் சண்முகவேலு, உடுமலைத் தொகுதியின் 3வது அமைச்சராவார்.
அண்ணா துரை முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் உடுமலை எம்.எல்.ஏ.வாக இருந்த சாதிக்பாட்ஷா இடம் பெற்றிருந்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் உடுமலைப் பேட்டை தொகுதியில் தேர்வுபெற்ற குழந்தைவேலு அமைச்சரானார்.
தற்போது ஜெயலலிதா அமைச்சரவையில் சண்முகவேலு அமைச்சராக்கப்பட்டுள்ளார்.