கோவை தொடர் குண்டு வெடிப்பு... குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு
கோவை:
கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது வரும் 26ம் தேதி குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படும்.
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக அல் உம்மாஇயக்கத் தலைவர் பாட்ஷா உட்பட 168 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் நாசர் மதானியும் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர்கள் மீதான வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால், குற்றப்பதிவுசெய்தல், வழக்கறிஞர்களை நியமித்தல் உட்பட பல்வேறு வழிகளில் இந்த வழக்கு தாமதப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை செவ்வாயன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய போலீசார் அழைத்தனர்.ஆனால், சிறையிலிருந்த பாட்ஷா, மதானி உட்பட 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்து விட்டனர்.
எனவே, போலீஸ் கமிஷனர் நரேந்திரபால் சிங், சிறைக்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தைநடத்தினார். பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றம் ஏற்படதா நிலையில், கமிஷனர் அதிரடி நடவடிக்கைமேற்கொண்டார்.
அவர்கள் அனைவரையும் போலீசார் உதவியுடன் ஒரு அம்புலன்சில் ஏற்றி நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்.இருப்பினும், குற்றச்சாட்டுப் பதிவை வரும் 26ம் தேதிக்கு நீதிபதி செல்வம் ஒத்தி வைத்தார்.