For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லண்டன் ஹோட்டல் வழக்கு: செப்டம்பர் 12ல் ஆஜராக ஜெ.க்கு கோர்ட் சம்மன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

லண்டனில் ஹோட்டல் வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில் முதல் குற்றவாளியாகக் கருதப்படும் தமிழக முதல்வர்ஜெயலலிதா செப்டம்பர் 12ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சென்னை செசன்ஸ் கோர்ட்செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இவ்வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவும், 2வது குற்றவாளியான அதிமுக எம்.பி. தினகரனும் ஜூன்12ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே கோர்ட் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால்இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை கோர்ட்டுக்கு வரவில்லை.

இவ்வழக்கின் மீதான விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணையை முடிப்பதற்கு இன்னும்1 ஆண்டு கால அவகாசம் வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நீதிபதியிடம்வேண்டினார்.

ஆனால், 1 ஆண்டு என்பது மிக நீண்ட காலம், விசாரணையை முடிப்பதற்கு 3 மாத கால அவகாசம் மட்டுமே தரமுடியும் என்று கூறினார் வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்குமார்.

மேலும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா, தினகரன் ஆகிய 2 பேரும் செப்டம்பர் 12ஆம் தேதி கோர்ட்டில்ஆஜராக வேண்டும் என்று கூறி அவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

லண்டனில் உள்ள 2 ஹோட்டல்களை ரூ.121.53 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கடந்த 1998ஆம் ஆண்டு லஞ்சஒழிப்புத் துறையினர் ஜெயலலிதா மீதும் தினகரன் மீதும் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X