For Quick Alerts
For Daily Alerts
Just In
கோவை பள்ளிகளில் சாதி சான்றிதழுக்குத் தடை
கோவை:
கோவையில் உள்ள பள்ளியில் சாதிச் சான்றிதழ் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் சாதிச்சான்றிதழ் அளிப்பதை எளிமைப் படுத்தும் வகையில் சாதிச் சான்றிதழ் கேட்டு கட்டயப்படுத்துக் கூடாது என்பதுஉட்பட பல்வேறு விதிமுறைகள் குறித்த சுற்றறிக்கை, கோவையில் உள்ள மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், பள்ளிகளில் கட்டடம் கட்டவோ, சீருடைகள் வாங்கவோ மாணவ, மாணவிகளிடம் நன்கொடை வசூல் செய்யக் கூடாது.அவ்வாறு நன்கொடை செய்யும் பட்சத்தில் அந்தப் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தச் சுற்றறிக்கைகூறுகிறது.
மாணவ, மாணவிகளுக்கு உரிய காலத்தில் பஸ் பாஸ் வாங்கித் தர அனைத்துப் பள்ளிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, June 12, 2001, 5:30 [IST]