ஆற்காடு வீராசாமி தம்பிக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை:
மிரட்டல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தி.மு.க. அமைச்சர்ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜனை சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த இரும்பு கான்ட்ராக்டரை மிரட்டியதற்காக தேவராஜன் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேவராஜன் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனு சென்னை முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, தேவராஜன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் இன்னமும் விசாரணை முடியவடையவில்லை. மேலும குற்றம் சாட்டப்பட்டவருக்கு தேவையானமருத்துவ வசதிகள் செய்து கொடுக்கபட்டுள்ளன. எனவே அவரை ஜாமீனில் விடுதலை செய்யக்கூடாது என அரசுதரப்பு வக்கீல் கோமதிநாயகம் வாதிட்டார்.
தேவராஜனின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த வழக்கு அரசியல் பின்னணியுடன் போடப்பட்டவழக்கு. எனவே தேவராஜனை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என தேவராஜன் தரப்பில் ஆஜரான வக்கீல்சண்முகசுந்தரம் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மலை சுப்ரமணியம் தேவராஜனை ரூ.5,000 சொந்த ஜாமீனிலும், அதேதொகைக்கான இரு நபர் ஜாமீனிலும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும் தேவராஜன் கேட்டுக் கொண்டபடி அவர் 10 நாட்கள் ஹைதராபாத்திலேயே தங்கியிருக்க வேண்டுமஎனவும் உத்தரவு பிறப்பித்தார்.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications