Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆற்காடு வீராசாமி தம்பிக்கு நிபந்தனை ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மிரட்டல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தி.மு.க. அமைச்சர்ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜனை சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த இரும்பு கான்ட்ராக்டரை மிரட்டியதற்காக தேவராஜன் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேவராஜன் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனு சென்னை முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, தேவராஜன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் இன்னமும் விசாரணை முடியவடையவில்லை. மேலும குற்றம் சாட்டப்பட்டவருக்கு தேவையானமருத்துவ வசதிகள் செய்து கொடுக்கபட்டுள்ளன. எனவே அவரை ஜாமீனில் விடுதலை செய்யக்கூடாது என அரசுதரப்பு வக்கீல் கோமதிநாயகம் வாதிட்டார்.

தேவராஜனின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த வழக்கு அரசியல் பின்னணியுடன் போடப்பட்டவழக்கு. எனவே தேவராஜனை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என தேவராஜன் தரப்பில் ஆஜரான வக்கீல்சண்முகசுந்தரம் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மலை சுப்ரமணியம் தேவராஜனை ரூ.5,000 சொந்த ஜாமீனிலும், அதேதொகைக்கான இரு நபர் ஜாமீனிலும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும் தேவராஜன் கேட்டுக் கொண்டபடி அவர் 10 நாட்கள் ஹைதராபாத்திலேயே தங்கியிருக்க வேண்டுமஎனவும் உத்தரவு பிறப்பித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+