யானை தாக்கி பாகன் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவில் யானை தாக்கியதில் யானைப் பாகன் பலத்த காயமடைந்தார்.
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் ஒரு பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தற்போது உற்சவமும்,திருவிழாவும் நடந்து வருகிறது. இந்தத் திருவிழாவிற்காக யானை ஒன்று கொண்டு வரப்பட்டது.
யானைப் பாகன் சுப்ரமணி, யானையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். யானையைக் குளிப்பாட்டிவிட்டு அதற்கு அலங்காரம் செய்வதற்காக, பொடி வகைகளை எடுத்து பூசிக் கொண்டிருந்தார். அப்போதுஎதிர்பாராதவிதமாக யானையின் கண்ணில் இந்த பொடி விழுந்தது.
இதனால் கோபமடைந்த யானை, பாகனை தனது தந்தத்தால் குத்தி தூக்கியது. இதில் சுப்ரமணியின் வயிற்றில்காயம் ஏற்பட்டு, குடல் சரிந்தது. அவரைப் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.அவர்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.












Click it and Unblock the Notifications