கள்ளத் தொடர்பு... தந்தை, மனைவி கொலை
ஈரோடு:
கள்ளத் தொடர்பு வைத்திருந்த தந்தையையும் மனைவியையும் கொலை செய்தவர் தலைமறைவாகி விட்டார்.
ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர் (65). இவரது மகன் கோவிந்தசாமி (45).கோவிந்தசாமியின் மனைவி தாயம்மாள் (38). கருப்பண்ணகவுண்டருக்கும் தாயம்மாளுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இதனை கோவிந்தசாமி அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். ஆனால், தாயம்மாள் அதை கேட்கவில்லை.
இந்த சமயத்தில், கடந்த திங்களன்று இரவு தாயம்மாள் மற்றும் கருப்பண்ணகவுண்டர் இருவரும் சேர்ந்திருந்ததைபார்த்துள்ளார் கோவிந்தசாமி. இதையடுத்து கோபம் கொண்ட அவர்இரும்புத் தடி ஒன்றை எடுத்து இருவரையும்அடித்துள்ளார்.
இருவரும் அதே இடத்தில் இறந்தனர். இதையடுத்து கோவிந்தசாமி தலைமறைவாகி விட்டார். இது குறித்துபோலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கோவிந்தசாமியைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications