நிர்வாக வசதிக்காக அமைச்சர்கள் மாற்றம்: ஜெ.
சென்னை:
நிர்வாக வசதிகளுக்காகத்தான் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது என முதல்வர் ஜெயலலிதாதெரிவித்துள்ளார்.
சந்தன வீரப்பனைப் பிடிப்பது தொடர்பாக ஜெயலலிதா தமைையில் தமிழக-கர்நாடக உயர் அதிகாரிகள் கூட்டம்திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் நடந்தது,. கூட்டத்திற்கு பின் ஜெயலலிதா செய்தியாளர்களுக்குபேட்டியளித்தார்.
பேட்டியின் போது அவர் கூறுகையில், நிர்வாக வசதிக்காகத்தான் தமிழக அமைச்சரவையில் மாற்றம்செய்யப்பட்டது, அமைச்சர்கள் மாற்றப்பட்டதற்கு கூறப்படும் கருத்துக்களுக்கு பதில் கூற இயலாது.
தமிழகத்தில் அரிசிவிலை உயரவில்லை. நாடு முழுவதும் அரிசி தாராளமாக கிடைக்கிறது. வெளிமார்க்கெட்டிலேயே அரிசி தாராளமாக கிடைப்பதால் அரிசி விலை குறைந்துள்ளது.
காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகம் கூறவில்லை. இது தவறான செய்தி. தற்போது போதுமானஅளவு தண்ணீர் கையிருப்பு உள்ளது. மேட்டூரில் செவ்வாய்க்கிழமை தண்ணீர் திறந்துவிடப்படும். தண்ணீர்பற்றாக்குறை ஏற்படும் போது இதுபற்றி பேசலாம் என்றார்.
தேக்குமர கடத்தல் தொடர்பாககத்தான் அமமைச்சர் அய்யாறு வாண்டையார் பதவி நீக்கம் செய்யப்பட்டாரா என்றகேள்விக்கு பதிலளிக்க முதல்வர் ஜெயலலிதா மறுத்துவிட்டார்.