கிருஷ்ணகிரியில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் காயம்
தர்மபுரி:
கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை நடந்த பயங்கரக் கலவரத்தில் 4 போலீஸார் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.இதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் குண்டுக் காயம் அடைந்தனர்.
கிட்டாம்பட்டியைச் சேர்ந்த பா.ம.க. தலைவர் அர்ச்சுணன் (32) நகை அடகு வைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகிருஷ்ணகிரிக்கு வந்தார். அப்போது அவரை மேல் தெருவைச் சேர்ந்தவர்கள் தடியால் அடித்து நகையைப் பறித்துசென்றனர். இது குறித்து போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக மேல்பேட்டையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 6பேரையும் விடுதலை செய்ய ஒரு பிரிவினர் கோரினர். இதற்கிடையே இவர்களை விடுதலை செய்யக் கூடாதுஎனக் கூறி கிருஷ்ணகிரியில் உள்ள சென்னை ரோட்டில் ஒரு தரப்பினர் சாலைமறியல் செய்தனர். இனால் பதட்டம்ஏற்பட்டது.
அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அதிகாரிகளின்பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியல் கைவிடப்பட்டது.
மீண்டும் திங்கள்கிழமை காலை கிட்டாம்பட்டியைச் சேர்ந்த கிராமத்தினர் 2 ஆயிரம் பேர் மேலத் தெருவைச்சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக கும்பலாக கத்தி அரிவாளுடன் வந்தனர். கிருஷ்ணகிரி நகராட்சிஅலுவலகம் அருகே வந்த அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆனால், போலீசாரை மீறி அவர்கள் செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளைவீசினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 4 போலீஸார் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
தொடர்ந்து நிலைமைக் கட்டுக்கடங்காமல் போகவே, பிளாஸ்டிக் குண்டுகளை நிரப்பி போலீசார் துப்பாக்கிச் சூடுநடத்தினர். இதில் 4 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் உடனடியாக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 2பேர் நிலைமை மிகவும் கவலைக் கிடமாக உள்ளது. இவர்கள் தீவிர சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
கலவரத்தை ஒடுக்க போலீசார் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தற்போது அங்கு அமைதிஏற்பட்டுள்ளது என எஸ்.பி மஞ்சுநாதா தெரிவித்துள்ளார்.
போலீசார் கிருஷ்ணகிரி நகர் முழுவதும் தீவிரப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.