மதுரையில் வட்டிக்கடைக்காரர் படுகொலை
மதுரை:
மதுரையில் வட்டிக்கடைக்காரர் ஒருவர் செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.
மதுரை கீழசந்தைப் பேட்டையில் வசித்து வருபவர் பெருமாள் (வயது 33). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும்தொழில் செய்து வந்தார்.
6 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென்று அவருடைய வீட்டுக்குள் புகுந்து அவரை சராமாரியாக அரிவாளால்வெட்டியது. இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்து போனார்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன பெருமாளின் உடலை மதுரைஅரசு ராஜாஜி பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை சிறுத்தை அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் முருகன் என்பவரையும், அவரது கூட்டாளிகள் 5 பேரையும் போலீசார்தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு ஒன்றும் பதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.