மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேட்டூர் அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:
ஏராளமான விவசாயிகளின் விருப்பப்படி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்துசெவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும்.
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தைப் பொறுத்தும் அணையில் இருக்கும் நீர் இருப்பைப் பொறுத்தும் அடுத்தஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி வரை தண்ணீர் வழங்கப்படும்.
விவசாயப் பெருங்குடி மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். இதற்காக அவர்கள்பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் நீர்ப் பங்கீட்டில் நல்ல ஒத்துழைப்பு அளித்து பயன் அடைய வேண்டும்என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications