For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லட்சுகணக்கில் நர்சுகளை அழைக்கிறது அமெரிக்கா

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

அமெரிக்காவில் விரைவில் லட்சக்கணக்கான நர்சுகள் வேலைக்கு அமர்த்தப்பட உள்ளனர்.

அங்குள்ள நர்சுகளுக்கு 45 வயதிலேயே ரிடையர்மென்ட் கொடுத்து அனுப்பி விடுவதால், லட்சக்கணக்கான நர்சுவேலைகள் காலியாகின்றன. இங்குள்ள 5000 மருத்துவமனைகளில் கணக்கெடுத்ததில் 715 மருத்துவமனைகளில்1,26,000 நர்சுகள் காலியக உள்ளன.

இதனால் தற்போது ப்ரீலேன்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள 3,000 நர்சுகளுக்கு 1 மணி நேரத்திற்கு ரூ.3,200சம்பளமாக அளிக்கப்பட்டு வருகிறது. அரசாங்கத்துக்கு இந்த நிதிச்சுமையைத் தாங்க முடியவில்லை போலும்.

வெளிநாட்டினரை நர்சு வேலைக்கு நியமித்தால்தான் சரிப்படும் என்று நினைத்த அமெரிக்க மருத்துவமனைகள்,தங்கள் நர்சு "வேட்டை"யை முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆரம்பித்தன. பிலிப்பைன்ஸ் நாட்டு நர்சு படிப்புக்கும்அமெரிக்க நாட்டு நர்சு படிப்புக்கும் அவ்வளவு ஒரு ஒற்றுமையாம்! அதனால், பிலிப்பைன்ஸ் நாட்டில் படிப்பைமுடித்துவிட்டு வெளியே வந்து கொண்டிருந்த நர்சுகளை அப்படியே கொத்திக் கொண்டு வந்தன அமெரிக்கமருத்துவமனைகள்!!

இதேபோலவே இங்கிலாந்திலும் சில வேலைவாய்ப்புக் கண்காட்சிகளை நடத்தி நர்சுகளை "இறக்குமதி" செய்தனர்.அப்படியும் இப்படியுமாக சுமார் 700 நர்சுகள்தான் தேறினர். அதனால்தான் தற்போது தடாலடியாக இப்படி ஒருஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது நியமிக்கப்படவிருக்கும் நர்சுகளுக்கு 1 மணி நேரத்துக்கு 25 டாலர்கள், அதாவது ரூ.1,150 சம்பளமாகவழங்கப்படுமாம். இதனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளிலிருந்து நர்சுகள் வந்து குவிந்து விடுவார்கள்என்ற நம்பிக்கையோடு, நர்சுகளை வரவேற்க வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றன அமெரிக்கமருத்துவமனைகள்!

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X