அரிசி கொள்முதலில் ஊழல்: தி.மு.க. அரசு மீது வழக்கு
சென்னை:
தரம் குறைந்த அரிசியை இருப்பில் வைத்திருந்த முன்னாள் தி.மு.க. அரசு மீது விரைவில் லஞ்ச ஒழிப்புத் துறையின்விசாரணைக்கு உத்தரவிடப் போவதாகத் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
கடந்த தி.மு.க. ஆட்சியின் போது மக்களுக்குக் கொடுப்பதற்காக ரேஷன் அரிசி வாங்கப்பட்டுள்ளது. இதில்,தற்போது ரூ.65 கோடி மதிப்புள்ள அரிசி அழுகி நாற்றமெடுத்துப் போய் இருக்கிறது. புழு பூச்சிகள்தான் அந்தஅரிசியில் மிகுந்து உள்ளது. இனி அதை யாரும் சாப்பிட முடியாது. தூக்கி வெளியே எறியத்தான் முடியும்.
இது குறித்து தி.மு.க. அரசின் மீது ஊழல் தடுப்புத்துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்படும் இந்த விசாரணைவரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன் முடிவடைந்துவிடும்.
இந்த விசாரணை குறித்த ஒரு வெள்ளை அறிக்கையும் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தாக்கல்செய்யப்படும் என்றார் ஜெயலலிதா.
முன்னாள் தி.மு.க. அரசின் மீது தற்போதைய அ.தி.மு.க. அரசு தொடுக்கவிருக்கும் முதல் வழக்கு இது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications