கண்ணில் மிளகாய் பொடி தூவி 6 லட்சம் கொள்ளை
ஒசூர்:
பெட்ரோல் பங்க் மேலாளரின் கண்ணில் மிளாகய்ப் பொடியைத் தூவி ரூ.6 லட்சத்தைக் கொள்ளையடித்துச்சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஒசூர்-பெங்களூர் ரோட்டில் வெங்கடேஸ்வரா பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு மேலாளராகப் பணியாற்றி வந்தவர்ஏ.முருகேசன். இவர் திங்கள்கிழமை 6 லட்சத்து 5 ஆயிரத்து 755 ரூபாயை வங்கியில் செலுத்துவதற்காகப்புறப்பட்டார். அவருடன் நீலமேகம் என்பவரும் சென்றார். இருவரும் மொபெட்டில் சென்று கொண்டிருந்தனர்.
ஒசூர் போக்குவரத்துப் போலீஸ் ஸ்டேஷன் அருகே இருவரும் சென்று கொண்டிருந்தபோது, இவர்களை ஒருமோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்தனர். பின்னர், கையிலிருந்து மிளாகாய்ப்பொடியை அவர்கள்கண்ணில் தூவி விட்டு அவர்களிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும்கண்ணிமைக்கும் நேரத்தில் சென்று விட்டனர்.
இது குறித்து முருகேசன் ஓசூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications