தரம் குறைந்த மாநகராட்சி பள்ளிகள்: தி.மு.க. கண்டனம்
கோவை:
கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் ஒரு பள்ளி கூட பிளஸ் டூ தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறவில்லை என்றுமாநகராட்சியில் மன்ற திமுக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சமீபத்தில் நடந்த கோவை மாநகராட்சியின் மன்றக் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.இக் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள், மாநகராட்சியின் கல்வி நிலை குறித்து கவலை தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சியில் 11 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு பள்ளி கூட தற்போதுமுடிந்த பிளஸ் டூ தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறவில்லை. கடந்த ஆண்டு பொதுத் தேர்வில், பெரும்பாலானபள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
எனவே, மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் சரியான முறையில் பாடம் நடத்தவில்லை என்றும் ஆசிரியர்களைஅதிகாரிகள் கண்காணிக்கவில்லை என்றும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
திமுக கவுன்சிலர்கள் இது குறித்து கண்டனம் தெரிவித்து மாநகராட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்புச்செய்தனர்.