1330 குறளையும் ஒப்புவித்த சிறுமிக்கு ஜெ. பரிசு மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

1330 திருக்குறளையும் ஒப்புவித்து சாதனை படைத்த 11 வயது சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் பணப்பரிசும், வீடும்வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சிறுமியின் படிப்புச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.

இதற்கான உத்தரவைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை பிறப்பித்தார்.

கடலூர் மாவட்டம், வீகமுடையநத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவராஜி என்ற 11 வயது சிறுமி. இவர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். இவர் சில தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனு ஒன்றுஅனுப்பியிருந்தார்.

அந்த மனுவில் தனது பள்ளியில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் தான் முதலிடம் பெற்றிருப்பதாகவும்,திருக்குறள் ஒப்புவிப்பதில் பரிசு பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தன் குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதால் தனது படிப்பிற்கு உதவ வேண்டும், தங்களுக்கு வீடுதரவேண்டும், ஏழ்மை காரணமாக திருமணமாகாமல் இருக்கும் தனது மூத்த சகோதரியின் திருமணத்திற்கு உதவவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதையடுத்து திருக்குறள் அனைத்தையும் இந்த சிறு வயதிலேயே மனப்பாடம் செய்து ஒப்புவித்து சாதனைபுரிந்ததைப் பாராட்டி அந்த சிறுமிக்கு ரூ.5,000 பரிசு வழங்கினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

மேலும் அந்த சிறுமி கேட்டுக் கொண்டபடி அவருக்கு அரசு சார்பில் வீடு ஒன்றை வழங்க ஏற்பாடு செய்யுமாறுகடலூர் மாவட்ட ஆட்சி தலைவருக்கு முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். அச்சிறுமியின் கல்விச் செலவை அரசேஏற்றுக் கொள்ளும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

சிறுமி சிவராஜியின் 21 வயது சகோதரிக்கு உதவுவதற்கு அரசின்வசம் எந்தத் திட்டமும் இல்லாத காரணத்தால்அவருக்கு எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பாக ரூ 10,000 வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா தெரிவித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+