For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொண்டர்கள் முன் சபதம் செய்தார் வைகோ

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

"உங்களை சட்டப் பேரவைக்கு அழைத்துச் செல்லும் வரை ஓயமாட்டேன் என கோவையில் தொண்டர்களைப்பார்த்து சபதம் ஏற்றுப் பேசினார் வைகோ.

கோவையில் நடந்த ம.தி.மு.க. பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர்வைகோ பேசியதாவது:

மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஒவ்வொரு ம.தி.மு.க. தொண்டரும் உறுதியேற்று பணியாற்ற வேண்டும்.மக்களுடைய அடிப்படை பிரச்னைகளை அலசி ஆராய்ந்து அதனைத் தீர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.அப்போதுதான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும்.

நடந்து முடிந்த தேர்தலில் ஒரு இடம் கூட பிடிக்க முடியவில்லை என எல்லோருக்கும் வருத்தம் இருந்திருக்கும்.உங்கள் எல்லோரையும் சட்டப் பேரவைக்கு அழைத்துச் செல்லும் வரை ஓயமாட்டேன். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக ம.தி.மு.க. மட்டுமே இருக்க முடியும்.

நடந்து முடிந்த தேர்தலில் பல சோதனைகள், வேதனைகள் இருக்கத்தான் செய்யும். இருந்தபோதிலும் தஞ்சையில்நடந்த செயற்குழுக் கூட்டத்தில் யாரும் தனித்து நின்று போட்டியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதற்காகயாரும் வருந்தவும் இல்லை.

எனவே, தனித்து நின்று போட்டியிட்டது சரிதான் என்பதை எல்லோரும் வலியுறுத்தியதில் நான்மகிழ்ச்சியடைகிறேன்.

மக்கள் மனதில் இடம் பிடியுங்கள். குறிப்பாக கிராமமக்களிடையே நமது திட்டங்களையும் கொள்கைகளையும்எடுத்துக் கூறுங்கள் என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X