ஒருநாள் போட்டி: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
மும்பை:
ஜிம்பாப்வேயில் நடைபெறவிருக்கும் 3 நாடுகளுக்கிடையேயான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்விளையாடுவதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் புதன்கிழமை கூடிய இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு இந்த அறிவிப்பை வெளியிட்டது.
ஸ்ரீநாத் மற்றும் தாஸ் இப்போட்டிகளிலிருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளனர். மேலும், 2வது கிரிக்கெட் டெஸ்ட்முடிந்தவுடன் நேஹ்ரா, பகுதுலே, ரமேஷ் ஆகியோரை அழைத்துக் கொண்டு, இந்தியாவிற்குப்பெட்டி-படுக்கையைக் கட்டவிருக்கிறார்கள் ஸ்ரீநாத்தும் தாஸும்.
வீரேந்திர ஷேவாக் மற்றும் ஹர்விந்தர் சிங் ஆகியோர் ஒருநாள் போட்டிகளுக்குப் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.மேலும், ஜிம்பாப்வேயுடனான மற்ற ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ரீத்திந்தர் சிங் ஸோதி, தினேஷ்மோங்கியா ஆகியோரும் அழைக்கப்படுவார்கள்.
3 நாடுகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகள் வரும் ஜூன் 23ம் தேதி ஆரம்பமாகிறது. ஜிம்பாப்வேயும்மேற்கு இந்தியத் தீவுகளுக்குமிடையே முதல் போட்டி நடைபெறும். அதற்கு மறுநாள் இந்தியாவுடன் மோதுகிறதுஜிம்பாப்வே.
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்:
சவுரவ் கங்குலி (கேப்டன்), சச்சின் தண்டுல்கர், ஹேமங் பதானி, தேபாசிஷ் மொஹந்தி, ஹர்பஜன் சிங், ஹர்வீந்தர்சிங், தினேஷ் மோங்கியா, ராகுல் திராவிட், விவிஎஸ் லக்ஷ்மண், சமீர் திகே (விக்கெட் கீப்பர்), ஷாகீர் கான்,ரீத்திந்தர் சிங் ஸோதி, அஜித் அகர்கர், வீரேந்திர ஷேவாக்.












Click it and Unblock the Notifications