கணவனைக் கொன்ற பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை
கோவை:
கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்ற பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சேத்துமடை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி(35). இவரது மனைவி லட்சுமி (30).
ஜோதிமணி அடிக்கடி குடித்து விட்டு மனைவி லட்சுமியிடம் தகராறு செய்து வந்தார்.. கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல்மாதம் 25ம் தேதி வழக்கம்போல இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் லட்சுமியை அரிவாளால் தாக்கி வெட்டஜோதிமணி முயன்றார்.
அப்போது அரிவாள் தவறிக் கிழே விழுந்தது. அதனை லட்சுமி எடுத்து கணவரை வெட்டிச் சாய்த்தார். இதில்ஜோதிமணி இறந்து போனார். இவர்களுக்கு 10 வயதிற்குட்பட்ட 3 குழந்தைகள் உள்ளன.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து லட்சுமியைக் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, கோவை மாவட்ட நீதிபதி தணிகாசலம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகணவனை வெட்டிக் கொலை செய்த மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications