மேட்டூரில் மின் உற்பத்தி துவங்கியது
மேட்டூர்:
மேட்டூர் அணையில் செவ்வாய்க்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மின்சார உற்பத்தியும்துவங்கியுள்ளது.
காவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம்மிகவும் குறைவாக இருப்பதால் முழு அளவில் தண்ணீர் திறந்து விட இயலவில்லை.
பொதுவாக மேட்டூர் அணையில் தண்ணீர் முழு அளவில் திறந்து விடப்பட்டால் 360 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படும். சுரங்க மின்நிலையத்தில் 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. ஆனால்,இதில் இப்போது 40 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்ய இயலும்.
மேட்டூரிலிருந்து பவானி வரை உள்ள சொக்கனூர், குதிரைக்கால், கோட்டகம், ஊராப்பாளையம், ஆகிய 4இடங்களில் உள்ள நீர்மின் நிலையங்களில் தலா 30 மெகாவாட் உற்பத்தி செய்ய முடியும். இதில் 120 மெகாவாட்மின்சாரம் கிடைக்கும்.
இப்போது தண்ணீர் திறந்து விடப்பட்டதன் முலம் 150 முதல் 170 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவாய்ப்புள்ளது. தற்போது தண்ணீர் திறப்பு 429 கன அடி என்ற அளவிலிருக்கும். அணைக்கு தண்ணீர் வரத்துஇல்லை என்பதால் அணையின் நீர்மட்டம் குறையும் என இன்ஜினியர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications