இந்திய சாப்ட்வேர்களை வாங்க ஜப்பான் ஆர்வம்
கோவை:
இந்தியாவிலிருந்து ஜப்பான் நாட்டிற்கு சாப்ட்வேர் ஏற்றுமதி மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, ஜப்பானுக்குசாப்ட்வேர் ஏற்றுமதி செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம் என அந்நாட்டு தொழில் அமைப்புத் தலைவர் யூஜிஹசிமோட்டோ பேசினார்.
கோவையில் "இந்திய-ஜப்பான் தொழில் வாய்ப்புகள்" என்ற கருத்தரங்கை இந்திய தொழில்கள் சம்மேளனம்,ஜப்பான் நாட்டு தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தின.
இதில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டு தொழில் அமைப்புகளின் தலைவர் யூஜி ஹசிமோட்டோ பேசியதாவது:
இந்தியாவும், ஜப்பானும் தொழில் துறையில் இணைந்து செயல்பட பல அரிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தவாய்ப்பைத் தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜப்பான் பிரதமர் இந்தியாவிற்கு விஜயம் செய்தபிறகு பல்வேறு வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியும். இந்தியாவிலிருந்துஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் சாப்ட்வேர் வெறும் 4 சதவீதம் மட்டுமே. எனவே இது குறித்து ஆராய்ந்து சாப்ட்வேர்ஏற்றுமதியை அதிகரிக்க தொழிலதிபர்கள் முன்வர வேண்டும்.
ஜெட்ரோ எனப்படும் தொழில் அமைப்பு ஜப்பானில் தொழில் தொடங்க போதுமான வசதிகளை ஏற்படுத்திதருகிறது. ஜப்பானில் தொழில் தொடங்கினால், முதல் நான்கு மாதத்திற்கு இலவசமாக இடவசதியை அளிக்கவும்இந்த அமைப்பு உதவுகிறது. இந்த அமைப்பு 59 நாடுகளில் 80 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது என்றார்ஹசிமோட்டோ.